Friday, 5 December 2014

A.R Rahman's Co brother is Rahman

We are well known of A R Rahman and also Actor Rahman who made a good roles in 80's. Actor Rahman still in active mode in the south indian film industry, he married Mehrunnisa where AR Rahman's wife Saira Banu is the elder sister of Mehrunnisa.


Rahman's worked together in 'Sangamam' Tamil film, we didn't digged further on their joint works. If you well known on any details please comment or email to us.



If we dig further we can get the film industry people's relationship. Any one well known of this type of inline relationships please comment here or email to us.

Thursday, 4 December 2014

மரணமே இல்லாத உயிரினங்கள் உலகில் உண்டா ?

மரணமே இல்லாத உயிரினங்கள் உலகில் உண்டா ?

ஆம் உண்டு .


இப்போ இருக்கிற காலகட்டத்தில் நாம் ஒரு 60 வயது வாழுவதே பெரிதாக இருக்கிறது.

ஆனால் பூமியில் ஒரு சில உயிரினம் பல ஆண்டுகள் வாழும் திறனை கொண்டவைகளாக இருக்கின்றன, அவற்றில் ஒன்றுதான் இந்த JellyFish

JellyFish - குடை போன்ற உடல் உடைய இழுது மீன் 

ஜெல்லி பிஷ் - JellyFish



இந்த வகை உயிரினங்கள் தங்களுடைய சுற்றுபுரதிற்கு ஏற்றால் போல் தன் உடல் நிலைப்பாட்டை மாற்றிகொல்கின்றன. ஜெல்லிபிஷ் சராசரியாக 500 ஆண்டுகள் வாழுமாம், அவைகள் தாங்கள் முதிர்ச்சி அடையும் காலங்களில் தனது உடல் செல் அமைப்பை மாற்றி மீண்டும் இளமையயாகிவிடுமாம்.

ஜெல்லி பிஷ் மட்டும் அல்ல இன்னும் நிறைய உயிரினங்கள் அழிவில்லா வாழ்கையை வாழ்கின்றன.

hexactinellid - ஹெசேச்டிநேல்லிட் எனப்படும் இவை 15000 ஆண்டுகள் வாழ - கூடியவைகல், அடேங்கப்பா !!!!!.....




hexactinellid





ஜெல்லி பிஷ்சை தொட்டுக்கிட்டு புடாதீங்க, தோட்டா மரணம் தான் !!!!.... ஜெல்லிபிஷ் உடம்பில் இருக்கும் அமிலம் மனிதர்களை கொல்லகூடியவைகல்


இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு :)







Wednesday, 5 November 2014

ஓநாயும் ஆட்டுகுடியும் - மிஸ்கின்- wolf and the goat

நான் ரிசித்த படங்களில் ஒன்று "ஓநாயும் ஆட்டுகுடியும் ", தமிழ் சினிமால வந்த படங்களில் இது  வேறு கோணம். படம் முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை .




படம் முழுக்க இளையராஜா சார் வருகிறார், ஒரு இசை கோலம், இசைலையே ஒரு சில காட்சிகள் அமைகபட்டன. ஒரு படம் வெற்றிபெற நடிகர் தேர்வு மிக அவசியம், A டு Z இதில் வருகிற கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த பாத்திரத்தில் பொருந்துகிறார்கள்.



ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் எப்படி இருப்பார்  "In Reality" நு பாத்தா , அவர் இந்த படத்தில் வரும் "Sri" ஸ்ரீ மாதிரியே தான், நான் மருத்துவ கல்லூரி விடித்திக்கு சென்றதுண்டு, 50% மாணவர்கள் போதை பயன்படுத்துவது வழக்கம். நான் ஏன் என்று கேட்டதும் உண்டு. நாம் படிபத்தற்கும் அவர்கள் படிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு, அவர்கள் தங்களுடைய தேர்வு நாட்களில் ஏதேனும் ஒரு போதை வஸ்துகளை பயன்படுத்துவார்கள், அப்போதான் concentration இருக்குமாம் :) 

இந்த படத்தில் வரும் CBI ஆபிசர் நச்சுனு அதுக்கு போருந்துறார். ஆனால் அதில் வரும் அந்த கண்தெரியாத பெண்மணி சற்று அந்த கதா பாத்திரத்தில் பொருந்தவிலயொனு நினைப்பேன். 

அந்த சிறு குழந்தை "கார்த்தி" , "Edward அண்ணா" / "ஒரு கத சொலுங்களே நு" சொல்ற இடங்கள் மென்மையா இருக்கு.




மிஸ்கினின் இடங்கள்:

எனக்கு மிஸ்கின் சார் ரொம்ப பிடிக்கும் அவருடைய படங்களை நான் தவறாமல் பார்த்துவிடுவேன்.  இந்த ஓ ஆ படம் ரொம்ப இஷ்டம்.

அவர் தன்னுடைய படங்களில் தவறாமல் ஒரு ஊனமுற்றோரை பயன் படுத்துவார். ஒரு மஞ்சள் பாட்டு கண்டிப்பாக இருக்கும் ஆனால் "ஓ ஆ" படத்தில் ஒரு பாடல் கூட இல்லை, இந்த படத்திற்கு அது தேவையும் இல்லை.



ஒரு இடத்தில மிஸ்கின் சார் தனது துப்பாக்கியை அந்த கண்தெரியாத தந்தையிடம் கொடுபார், ஆனால் அவர் வானத்தை நோக்கி சுடுவார்... கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. படம் முழுக்க ஒரே களேபரி, என்ன நடக்குதுனே புரியல, மிஸ்கின் சார் வர்ற அந்த கல்லறை காட்சி வரை. இந்த கல்லறை கட்சிக்கு பின்பு தான் அனைத்தும் புரிந்தது. 

படம் முழுக்க விறுவிறுப்பு - படத்தில் எப்படியும் ஒரு 50 பேர் சுடபட்டிருபார்கள், ஒரு சில சாவு சிரிப்பும், ஒரு சில சாவு கண்ணீரும் தந்தன.

படம் முழுக்க மிஸ்கின் சார் பேசுவதே இல்லை, அந்த கல்லறை காட்சியில் மொத்தமாக கொட்டிடுவார், அப்படி ஒரு நடிப்பு, வசனம், இசை, ஒளிப்பதிவு, அனைத்தும் என்னை அழவைத்தது. ஒரு 7 நிமிடத்தில் படத்தின் அணைத்து கதை, ஏன் இந்த படத்திற்கு "ஓநாயும் ஆட்டுகுடியும் " என்ற பெயர் வந்தது அனைத்தையும் சொல்லிவிடுகிறார். மிகவும் அருமையான இடம் அது. நீங்கள் இந்த காட்சியில் உருகவில்லை என்றால், உங்களயும் சுட்டுவிடலாம் :)





மிஸ்கின் சார் படத்தின் பெயர்கள் சற்று வித்தியசமாக இருக்கும்: உள்ப்  (Wolf), லால், தம்பா இந்த படத்துல வட்சுருபார்.

சண்டை கட்சிகளை ஒரு வேறு கோணத்தில் காட்டுவதில் மிஸ்கின் சார் வல்லவர், ஒரு துப்பாக்கியை சுடுவதில் இருந்து, தன்னுடைய பெல்டினால் சண்டைபோடுவது வரை.


படத்திற்காக:

இந்த படத்தில் அனைத்தையும் ரீயாலிடினு சொல்லமுடியாது, தம்பா கூட வர 2டு அடிஆட்கள், டப்பு டப்பு-நு நம்ம போலீஸ்-காரர்களை சுடுவது, ட்ரைன்ல இருந்து குதிப்பது, ட்ரைன்-ன ஹிஜாக் செய்வது. ஆனால் கண்டிப்பா சினிமாக்கு இது தேவை, சோ இது இல்லாட்டி சுவாரசியம் இருக்காது.

மிஸ்கின் சார் அடுத்த படத்துகாண்டி வைடிங் "Waiting"

ஆரோகியமா படத்தை ஆதரிக்கவும் 
















Tuesday, 4 November 2014

உலகத்தில் இன்னும் ஆதிவாசிகள் இருக்கிறார்களா ? - The Isolated peoples of the world





உலகத்தில் இன்னும் ஆதிவாசிகள் இருக்கிறார்களா ? 

ஆம் இருக்கிறார்கள், அதுவும் இந்திய நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் 




உலகத்தோடு தொடர்பில்லா மக்கள் 





நாம் அனைவரும் அந்தமான் நிகோபார் தீவின் பெயரைப் பற்றி கேள்வி பட்டிருப்போம், அந்த தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் தான் இந்த "செண்டிநிலி" Senteneli இனத்தவர்கள், இவர்கள் இன்று வரை எந்த ஒரு வேறு இட மனிதர்களை தங்கள் இடதிர்ற்குள் அனுமதிப்பது இல்லை. மீறி நுழைந்தால் மரணமே 


இந்திய மக்கள் தொகை கணக்கின்படி 21 ஆண் 18 பெண், ஆகா மொத்தம் 39 மக்கள் வாழலாம் என்று சொல்கிறது. ஆனால் வேறு சிலர் சுமார் 500 ருக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கலாம் என்று சொல்கிறார்கள் 


 72 கிலோமீட்டர்  (17,800 ஏக்கர்) பரப்பளவில் இவர்கள் வசிக்கிறார்கள்


வேட்டையாடுதல், மீன்பிடித்தல், மற்றும் காட்டு தாவரங்கள் உன்னுதல் - போன்ற பழக்கங்களை கொன்றவர்கள்.








ஆனால் அவர்கள் நெருப்பினை பயன்படுதுகிரர்களா? என்பது தெரியாது, அவர்கள் என்ன மொழியை பயன் படுத்துகிறார்கள் என்பதும் தெரியாது, ஏனென்றால் அவர்கள் யாரையும் அவர்களின் தீவிற்குள் அனுமதிப்பது இல்லை .


செண்டிநிலி மட்டும் அல்ல ஆப்ரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் சில ஆதிவாசி பிரிவிகள் இன்றும் வசிக்கின்றன 

கேமரா தூக்கிட்டு அங்கேயும் போய்டாதேங்க!!!! அவர்களாவது இந்த அசிங்கம் புடித்த உலக (நம்) வாழ்கையை பற்றி தெரியாமல் இருக்கட்டும்.




இந்த வீடியோ வ பாருங்க, இந்த காடுவசிகளை காண செல்லும் நம் மக்கள், ஆனால் அவர்களை நெருங்க முடியவில்லை 


Friday, 24 October 2014

பாசில் சாரை தெரியுமா உங்களுக்கு ? - Fazil the Director

பாசில் சாரை தெரியுமா உங்களுக்கு ? நான் ரசித்த படங்களில் இவருடைய படங்களும் அடங்கும். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல நடிகர்களின் தொகுப்பு இவரின் தனி அம்சம்




பூவே பூச்சூட வா, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேலை, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மெகா ஹிட்டை கொடுத்தவை , கேரள மாநில இயக்குனராக இருந்தாலும் தமிழ் படங்களை அற்புதமா கொடுத்தவர்.

அணைத்து படங்களிலும் இளையராஜா சார் தன் மியூசிக், கேட்கவா வேணும்? அப்படி ஒரு அற்புதமான இசை, பாடல்.

பூவே பூச்சூட வா - படம் ஒரு பேத்திக்கும், பாட்டிக்கும் உள்ள பந்தத்தை பற்றியது. மிக வித்தியாசமான படைப்பு, இனி அப்படி ஒரு படம் வராது !!!!


எனக்கு இந்த படத்தில் இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும் , வைரமுத்துவின் வரிகள் + இளையராஜா சார்


அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் 
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எறிந்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என்முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்


ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்


நீங்கள் 80களில் பிறந்திருந்தால் காதலுக்கு மரியாதை படத்தின் தாக்கம் புரிந்திருக்கும் , எந்த படம் வருகிறதோ அந்த படத்தின் தாக்கம் ரசிகர்களின் மத்தியில் இருக்கும் "நல்ல படமாக இருந்தால் " !.

அப்படி புரட்சி செய்த படம் தான் காதலுக்கு மரியாதை. ஷாலினியின் காலேஜ் லுக் அணைத்து பெண் ரசிகர்களையும் கவர்ந்தது, அந்த காலத்தில் காலேஜ் படித்த பெண்கள் அனைவரும் அவரை போன்றே புத்தகங்களை கையில் கொண்டு சென்றார்கள்.

விஜயின் கிருதா ஸ்டைல், குவாலியர் கிட்டிங், காலர் பட்டன், ஹீரோ ஹோண்டா பைக், கழுத்து செயின் ரொம்ப பேமஸ்.




இப்போ இந்த மாதிரிலாம் படம் வருவது ரொம்ப கஷ்டம்... ஓல்ட் இஸ் கோல்ட் 

தயாராகிக்கொண்டு இருக்கும் கருப்பு பண பதுக்கல் ஆசாமிகளின் பட்டியல்

இந்த புதிய இந்திய அரசு பல முயற்சிகள் செய்து வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மக்கள் வைத்துள்ள கருப்பு பண கணக்குகளை சேகரிதுள்ளது, வரும் வாரம் அதின் ஒரு பகுதியை வெளியட உள்ளது . பார்க்கலாம் யார் யாரின் பெயர்கள் அதில் இருக்கும் என்று !!!


இப்படி கருப்பு பணங்களை மீட்டுவதன் மூலம், நாம் அரசிடம் இருந்து சில வரி சலுகைகளை பெற வாயப்புள்ளது , இப்படி அரசிற்கு போக வேண்டிய பணங்கள் அனைத்தும் வெளிநாட்டில் பதுக்கபட்டு இருக்கிறது






அரசு னா ?? மக்கள் தான். ஓஹ அப்ப இதெலாம் நம்ம பணம்


நம்ம கட்டுற வரிகள் வீடு வரி, குழாய் வரி, மின்சார வரி, வருமான வரி மேலும் பல அரசிற்கு தான் போகுது, இப்படி சில அரசியல் வாதிகள் ஊழல் செய்த பணங்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டில் பதுகுவதன் மூலம் நாம் இந்த வரிகளை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை இருக்கிறது


சார் சிங்கபூர்ல வரி கட்டவே தேவை இல்லையாமே கரெக்டா ? 


மாசம் நம்ம வாங்குற சம்பளத்துல ஒரு பங்கு இந்த வரிகளுக்கே போகுது. இதுக்கெல்லாம் விடுவு காலம் வருமா?

நீங்களும் இந்த அசிங்கம் புடித்த சேனல்களை பார்க்காமல் இருப்பது நல்லது





தினமும் நாம் தொலைகாட்சியை பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விவாதம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. எந்த  செய்தி சேனல்களை பார்த்தாலும் யாரையாவது ஒரு நாலு பேரை உட்கார வைத்து வாக்குவாத நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்

ஒருவர் ஒரு நல்ல காரியத்தை செய்தால் கூட அதை அலசி ஆராய்ந்து விடுகிறார்கள், அவர் ஏன் செய்தார் ? எதற்கு செய்தார் ? என்று ஒரே கலேபரியாக இருக்கிறது , இப்படி செய்வதால் ஒருவன் நல்லது பண்ண நினைத்தாள் கூட பண்ணமாட்டார்.

தொலைகாட்சி ஊடகங்களுக்கு வேறு வேலை இல்ல போலும்

ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் போதும் அணைத்து தொலைகாட்சி சேனல்களும் அங்கே படை எடுக்கின்றன, இதை தப்பு என்று சொல்லவில்லை, ஆனால் நல்ல பயனுள்ள செய்தியை ஒளிபரப்புவது இல்லை,  ஓரிரு தொலைகாட்சிகள் மட்டுமே ஒளிபரப்புகிறது



  • மாணவர்களுக்கு பாடம் சம்மந்தமாக ஒரு நல்ல நிகழ்ச்சியை போடலாம்
  • என்ன அரசு வேலை வாய்ப்புகள் இருக்கிறது அதற்கு என்ன பண்ணலாம்
  • ஒரு ஒழுக்கமான பயனுள்ள கருத்துகளை சொல்லலாம்
  • நமது பாரம்பரியம், கிராமிய செய்திகள் ????


நான் காணும் 90% தொலைகாட்சிகள் அனைத்தும்


  • இவன் அவனை கொன்றான்
  • இவள் 2டாம் முறை திருமணம் செய்தால்
  • விபசார செய்திகள் - அதுவும் மிக ஆழமாக ஆராய்ந்து சொல்லுதல்
  • இந்த அரசியல் பிரமுகர் அங்கே ஏன் சென்றார்?
  • இப்போது எந்த நடிகர் சூப்பர் ஸ்டார்
  • கள்ள காதல், லஞ்சம்


ஆனால் ஒரு நல்ல விசயத்தை குறுகிய செய்தி பிரிவில் காட்டுகிறார்கள்

தயவு செய்து உங்கள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த வகையான சேனல்களை பார்க்க  வைக்க வேண்டாம்.

ஒரு கொலை, விபசார செய்தியை சொல்வதற்கு 1 மணி நேரமா ? அதுவும் காவல் துறையை  விட ஒரு படி மேலே போய் அந்த அசிங்கம் புடித்த சம்பவத்தை ஆராய்ந்து சொல்லுதல்.

அரசியல், விளையாட்டு, சினிமா, உருளை கிழங்கு எவ்வளவு?  மட்டும் செய்தி அல்ல 

உங்கள் பிள்ளைகளுக்கு "அனிமல் பிளானெட்","தமிழ் டிஸ்கவரி "போன்ற நல்ல, அறிவு வளர்ச்சியை சார்ந்த நிகழ்ச்சியை போட்டு காட்டவும், நீங்களும் இந்த அசிங்கம் புடித்த சேனல்களை பார்க்காமல் இருப்பது நல்லது